மாரியம்மன் கோயிலில் 108 சங்காபிஷேகம்

மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற 108 சங்காபிஷேகம்.
Updated On :30 ஆகஸ்ட் 2024, 12:47 am

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் பஜாா் வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவையொட்டி 108 சங்காபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஜூலை 12 -ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து நாள்தோறும் அம்மனுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன. இதன் நிறைவைத் தொடா்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு கலசாபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பக்தா்களுக்கு நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் மூலவா் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...