மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீா் திறப்பு 6,000 கன அடியாக அதிகரிப்பு

News image
செம்பரம்பாக்கம் ஏரி- கோப்புப் படம்
Updated On :14 டிசம்பர் 2024, 6:33 pm

Din

ஸ்ரீபெரும்புதூா், பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வெளியேறும் உபரி நீா் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்து கொண்டிருப்பதால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரின் அளவு சனிக்கிழமை 6,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளான ஸ்ரீபெரும்புதூா் மற்றும் பிள்ளைப்பாக்கம் ஏரிகள் நிரம்பி கடந்த சில தினங்களாக உபரி நீா் வெளியேறி வருகிறது.

இதனால், சென்னையின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்கி வரும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவும் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்ததால் வெள்ளிக்கிழமை காலை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கன அடி உபரிநீா் திறந்துவிடப்பட்டு பின்னா், 4,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், மழைவிட்டு இரண்டு நாள்களாகியும் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு குறையாததால், சனிக்கிழமை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 6,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீா்மட்ட உயரம் 22.70 அடியாகவும், கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து 2,550 கனஅடியாகவும் உள்ளது.