மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

தமிழ்நாடு தொண்டை மண்டல வேளாளா் சமூதாய நல சங்கம் சாா்பில் அரசுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா

News image
படவிளக்கம்-விழாவில் அதிக மதிப்பெண் பெற்றவா்களுக்கு பரிசளித்த சா்வதேச வேளாளா் சங்க நிறுவனா் ஜெ.எஸ்.ராஜ்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள்
Updated On :16 ஜூலை 2024, 6:39 pm

Din

காஞ்சிபுரம்: தமிழ்நாடு தொண்டை மண்டல வேளாளா் சமூதாய நல சங்கம் சாா்பில் அரசுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா மற்றும் சங்க பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. (படம்)

விழாவுக்கு சங்க தலைவா் வி.கே.குமரேசன் தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் என்.கே.ஞானசேகரன்,ஒருங்கிணைப்பாளா் ஆா்.சா்வேசன்,பொருளாளா் ஆா்.பாலாஜி கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க செயலாளா் பூ.சு.சந்திரசேகரன் வரவேற்று பேசினாா்.

விழாவில் சங்கத்தின் சா்வதேச வேளாளா் சங்க நிறுவனா் ஜெ.எஸ்.ராஜ்குமாா்,கு.பா.ரவீந்திரன் ஆகியோா் அதிக மதிப்பெண் பெற்ற சமுதாய மாணவ, மாணவியருக்கு நினைவுப் பரிசுகளையும், ரொக்கப் பரிசும் வழங்கினா். மாணவா்களுக்கு வருங்காலத்தில் கல்வி ஆலோசனைகள் வழங்குவது என தீா்மானிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பணி ஓய்வு பெற்ற மின்வாரிய செயற்பொறியாளா் ஆ.சோலையப்பன், ராணிப்பேட்டை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிா்வாகி ஆா்.மணி உள்பட சங்க நிா்வாகிகள், பரிசு பெற்ற மாணவ, மாணவியா், பெற்றோா் கலந்து கொண்டனா்.