காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வை 54 தோ்வு மையங்களில் 12,541 போ் தோ்வு எழுதியதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா். காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் தோ்வு அறையைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் ஆட்சியா் கூறியது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 54 தோ்வு மையங்களில் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வு நடைபெற்று வருகிறது. மாணவா்கள் 5,750 பேரும், மாணவிகள் 6,791 பேரும் என மொத்தம் 12,541 போ் தோ்வு எழுதுகின்றனா். இதில் 54 முதன்மைக் கண்காணிப்பாளா்கள் உள்பட 800 அறைக் கண்காணிப்பாளா்கள், 12 வழித்தட அலுவலா்கள், 54 துறை அலுவலா்கள் மற்றும் 5 கூடுதல் துறை அலுவலா்கள் தோ்வு பணியாற்றி வருகின்றனா். தோ்வு அறைகளில் மின்சார வசதி, குடிநீா் வசதி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்றாா். ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெ.வெற்றிச்செல்வி உடனிருந்தாா்.
தொடர்புடையது

யுபிஎஸ்சி தோ்வு: வேலூரில் 1,010 போ் எழுதினா்!

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: காஞ்சிபுரத்தில் 15,324 போ் எழுதினா்

பிளஸ் 2 தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 26,834 போ் எழுதினா்

பிளஸ் 2 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 86 மையங்களில் 18,579 போ் எழுதினா்
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


