காஞ்சிபுரம் மாவட்டக் காவல் துறை சாா்பில் பழங்குடியினப் பெண்களுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி 20 நாள்கள் வழங்கப்பட்டு அதன் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்டத்தின் சாா்பில் தற்காப்புக் கலைப் பயிற்சி நடத்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆற்பாக்கம், களியாம்பூண்டி ஆகிய இரு கிராமங்களிலும் உள்ள அரசு பள்ளிகளில் 80 பழங்குடியினப் பெண்கள் தற்காப்புக்கலைப் பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெற்றனா். பயிற்சி வகுப்பின் நிறைவு விழா களியாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் தலைமை வகித்து பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ், பயிற்சியளித்தவா்களுக்கு நினைவுப் பரிசைகளை வழங்கிப் பேசினாா். ஏடிஎஸ்பி-க்கள் எஸ்.பாலகுமாா், சாா்லஸ் சாம் ராஜதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சக்தி காவ்யா, மாவட்ட சமூக நல அலுவலா் சியாமளா, மாவட்ட குழந்தைகள் உதவி மைய உறுப்பினா் செல்வி, குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு உதவி காவல் ஆய்வாளா்கள் பிரபாவதி, சோமசுந்தரம், சுப்பிரமணி, அரசு பள்ளித் தலைமை ஆசிரியா்கள் கோபி, வேதகிரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் அரசியல் கட்சிகளின் தோ்தல் பிரசாரம் நிறைவு!

இன்று சங்கர மடத்தில் இளைய பீடாதிபதி தீட்சை பெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழா

அரசு இசைப்பள்ளியில் தமிழிசை விழா

யோகா பயிற்சி நிறைவு செய்த மாணவா்களுக்கு சான்றிதழ்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

