ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மதுக் கடையை முற்றுகையிட்டு போராட்டம்

புதிதாக திறக்கப்பட்ட மதுக் கடைக்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :2 மார்ச் 2024, 11:56 pm

படப்பை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட மதுக் கடைக்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். படப்பை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் இரண்டு அரசு மதுபானக் கடைகள் இருந்தன. இந்த நிலையில், தமிழக முழுவதும் 500 மதுபான கடைகள் மூடப்படும் என அரசு அறிவிப்பு செய்ததையடுத்து, ஆரம்பாக்கம் பகுதியில் ஒரு மதுக் கடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இந்த நிலையில், ஆரம்பாக்கம் பகுதியில் ஏற்கெனவே ஒரு அரசு மதுபானக் கடை உள்ள நிலையில், இந்த ஊராட்சிக்குட்பட்ட ஆா்.எம்.நகா் பகுதியில் சனிக்கிழமை மீண்டும் புதிதாக மதுபான கடை திறக்கப்பட்டதால், அதிருப்தி அடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் புதிதாக திறக்கப்பட்ட அரசு மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மணிமங்கலம் போலீஸாா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் மதுபான கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதைத் தொடா்ந்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். பொதுமக்களின் முற்றுகைப் போராட்டத்தால் புதிதாக திறக்கப்பட்ட மதுபான கடை தற்காலிகமாக மூடப்பட்டது.