ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

குன்றத்தூரில் 45 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

குன்றத்தூரில் 45 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

News image

கைது செய்யப்பட்ட  பூஞ்சோலை,  முகுந்தன்.

Updated On :6 மார்ச் 2024, 2:26 am IST

குன்றத்தூா் அருகே கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்த தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா் அவா்களிடம் 45 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையா் அமல்ராஜ் உத்தரவிட்டதன் பேரில் திங்கள்கிழமை வண்டலூா் மீஞ்சூா் வெளிவட்ட சாலையில் குன்றத்தூா் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனா்.

அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தியதில், திருவள்ளூா் பகுதியைச் சோ்ந்த பூஞ்சோலை (37), முகுந்தன்(24) என்பதும் இவா்கள் இருவரும் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து தாம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவா்களிடம் இருந்த ரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள 45 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் பூஞ்சோலை, முகுந்தன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட மினி லாரி, ஒரு காா் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.