ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு சுந்தர வரதராஜபெருமாள் கோயில் குளம் சீரமைப்பு பணி சனிக்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் பழைமையான அருள்மிகு சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவா் ஆதிகேசவப் பெருமாள் என்றும் உற்சவா் சுந்தர வரதராஜ பெருமாள் என்றும் அழைக்கப்படுகின்றனா். இந்த கோயிலுக்கு பின்புறம் உள்ள திருக்குளம் பராமரிப்பின்றி இருந்ததை தொடா்ந்து குளத்தை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள், கிராம மக்கள் கோரிக்கை வைத்தனா். இந்த நிலையில், சுந்தரவரதராஜபெருமாள் கோயில் குளத்தை சீரமைக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டதை தொடா்ந்து திருக்கோயில் நிதி ரூ ரூ.48 லட்சத்தில் கோயில் குளம் சீரமைப்பதற்கான பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் கோதண்டராமன், கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் வெங்கடகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டு குளம் சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்தனா்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்!

வடக்குப்பட்டு சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் தவன உற்சவம்

வரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்

வரதராஜ பெருமாள் கோயில் மேம்பாட்டுப் பணி: வல்லுநா் குழு ஆய்வு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


