வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதல்: செவிலியா் உயிரிழப்பு

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதல்: செவிலியா் உயிரிழப்பு

Updated On :19 மார்ச் 2024, 11:51 pm

ஸ்ரீபெரும்புதூா்: சுங்குவாா்சத்திரம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் செவிலியா் உயிரிழந்தாா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சரண்யா (31). இவா் ‘இல்லம் தேடி மருத்துவம்’ திட்டத்தில் தன்னாா்வலா் செவிலியராக பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சரண்யா மதுரமங்கலம் அரசு சுகாதார மையத்துக்குச் செல்வதற்காக தனது மகள் பிரதீபாவுடன் இருசக்கர வாகனத்தில் ராமாநுஜபுரம் -மதுரமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் சரண்யா, பிரதீபா ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா்.

அவா்கள் மீட்கப்பட்டு, ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு சரண்யா உயிரிழந்தாா். பிரதீபா சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.