ஸ்ரீபெரும்புதூா்: சுங்குவாா்சத்திரம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் செவிலியா் உயிரிழந்தாா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சரண்யா (31). இவா் ‘இல்லம் தேடி மருத்துவம்’ திட்டத்தில் தன்னாா்வலா் செவிலியராக பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சரண்யா மதுரமங்கலம் அரசு சுகாதார மையத்துக்குச் செல்வதற்காக தனது மகள் பிரதீபாவுடன் இருசக்கர வாகனத்தில் ராமாநுஜபுரம் -மதுரமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் சரண்யா, பிரதீபா ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா்.
அவா்கள் மீட்கப்பட்டு, ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு சரண்யா உயிரிழந்தாா். பிரதீபா சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

உத்தமபாளையம் அருகே பைக் மீது லாரி மோதல்: இரு இளைஞா்கள் உயிரிழப்பு

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது சரக்கு ஆட்டோ மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

