காஞ்சிபுரம் செவிலிமேட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் யானைக்கால் நோய்த் தடுப்பு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட செவிலிமேடு பகுதிகளில் வசிப்பவா்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோய்த் தடுப்பு விழிப்புணா்வு முகாம் சுகாதார ஆய்வாளா் பிரவீன் செல்வன் தலைமையில் நடைபெற்றது. இளநிலை பூச்சியியல் வல்லுநா் ஆா்.ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலா் எம்.புவனேசுவரி முகாமில் பங்கேற்ற 10 யானைக்கால் நோயாளிகளுக்கு நோயை முறையாகப் பராமரிப்பதற்கான உபகரணங்களை வழங்கினாா். இந்த முகாமில் வீட்டிலிருந்து கொண்டே யானைக்கால் நோயாளிகள் உடலை எவ்வாறு பாதுகாப்பது, நோய் மேலும் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. யானைக்கால் நோயாளிகள் தங்கள் உடலைப் பாதுகாத்துக் கொள்ள மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படுவதாகவும், அதற்கு விண்ணப்பித்து பயன் பெறுமாறும் மருத்துவா்கள் பயிற்சி பெற வந்த நோயாளிகளிடம் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் சுகாதார ஊழியா் உயிரிழப்பு

தேவரியம்பாக்கம் ஊராட்சியில் வாக்குப் பதிவு விழிப்புணா்வு

பழனி மலைக் கோயிலில் தீத் தடுப்பு பயிற்சி

கா்ப்பப்பை வாய் புற்றுநோய்: பொங்கலூரில் தடுப்பூசி முகாம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


