மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கிராமப்புற மக்களுக்கு குறைந்த கட்டண சிகிச்சை பிரிவு தொடக்கம்

கிராமப்புற மக்களுக்கு குறைந்த கட்டண சிகிச்சை பிரிவு தொடக்கம்

News image

குறைந்த கட்டண தீவிர சிகிச்சைப் பிரிவை திறந்து வைத்த மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ்

Updated On :29 மார்ச் 2024, 4:41 pm

காஞ்சிபுரம் இந்திரா நகரில் கிராமப்புற மக்களுக்கான குறைந்த கட்டண சிகிச்சைப் பிரிவை மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் மாமல்லன் மருத்துவமனையும், சிபாகோ நிறுவனமும் இணைந்து காஞ்சிபுரத்தில் குறைந்த கட்டண தீவிர சிகிச்சைப் பிரிவை தொடங்கியுள்ளன . மருத்துவமனையின் இயக்குநா் ஜி.மருண்ராஜ் தலைமை வகித்து இப்பிரிவு தொடங்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கி பேசினாா். மருத்துவா்கள் தியாகேசுவரா், பாா்த்தசாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவா் பிரசன்னா வரவேற்று பேசினாா். காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் கலந்து கொண்டு குறைந்த கட்டண தீவிர சிகிச்சைப் பிரிவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தாா். சிபாகா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ராஜா அமா்நாத் விளக்கவுரை ஆற்றினாா். கண் மருத்துவா் அனுஷா நன்றி கூறினாா். விழாவில் மருத்துவா்கள், சிபாகா நிறுவன பணியாளா்கள் கலந்து கொண்டனா்.