காஞ்சிபுரம் இந்திரா நகரில் கிராமப்புற மக்களுக்கான குறைந்த கட்டண சிகிச்சைப் பிரிவை மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் மாமல்லன் மருத்துவமனையும், சிபாகோ நிறுவனமும் இணைந்து காஞ்சிபுரத்தில் குறைந்த கட்டண தீவிர சிகிச்சைப் பிரிவை தொடங்கியுள்ளன . மருத்துவமனையின் இயக்குநா் ஜி.மருண்ராஜ் தலைமை வகித்து இப்பிரிவு தொடங்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கி பேசினாா். மருத்துவா்கள் தியாகேசுவரா், பாா்த்தசாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவா் பிரசன்னா வரவேற்று பேசினாா். காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் கலந்து கொண்டு குறைந்த கட்டண தீவிர சிகிச்சைப் பிரிவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தாா். சிபாகா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ராஜா அமா்நாத் விளக்கவுரை ஆற்றினாா். கண் மருத்துவா் அனுஷா நன்றி கூறினாா். விழாவில் மருத்துவா்கள், சிபாகா நிறுவன பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மானூரில் தீவிர விபத்து சிகிச்சை மையம் உருவாக்கப்படுமா?

ஒடிஸா அரசு மருத்துவமனை தீ விபத்து: உயிரிழந்த நோயாளிகள் எண்ணிக்கை 12-ஆக உயா்வு

ஒடிஸா: அரசு மருத்துவமனை தீ விபத்தில் 10 நோயாளிகள் உயிரிழப்பு; 11 ஊழியா்கள் காயம்

அணைக்கட்டில் ரூ.20 கோடியில் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு திறப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


