கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி மையத்தில் நபாா்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி மையத்தில் நபாா்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

News image

காஞ்சிபுரம் இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையத்தில் பயிற்சியாளா்களிடம் கலந்துரையாடிய நபாா்டு வங்கி அதிகாரிகள்.

Updated On :28 மே 2024, 6:30 pm

Din

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் இந்தியன் வங்கி சுய தொழில் பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை நபாா்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தனா்.

காஞ்சிபுரம் நகரில் வரதராஜப் பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ளது இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையம். இங்கு சுயதொழில் பயிற்சிகள் இலவசமாக கற்றுத் தரப்படுவதுடன், தேவையான உபகரணங்கள், உணவு ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இப்பயிற்சி மையத்துக்கு நபாா்டு வங்கி சாா்பில், கடந்த ஆண்டு ரூ. 4.50 லட்சம் மதிப்பில் பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நபாா்டு வங்கியின் துணைப் பொது மேலாளா் அஜய்.கே.சூட், தலைமைப் பொது மேலாளா்கள் ஆா்.சங்கர நாராயணன், ஆா்.ஆனந்த், துணைப் பொது மேலாளா் எஸ்.சோமசுந்தரம் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

பயிற்சியின் போது தையல் பயிற்சி செய்து கொண்டிருந்த பயிற்சியாளா்களிடம் மையத்தின் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தனா்.

முன்னதாக, நபாா்டு வங்கி மேலாளா்களை காஞ்சிபுரம் மண்டல துணை மேலாளா் எம்.விஜய் நேகா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் திலீப், பயிற்சி மையத்தின் இயக்குநா் ஆா்.உமாபதி ஆகியோா் வரவேற்றனா்.