புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

Din

மாங்காடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி உள்பட இருவரை மாங்காடு போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மாங்காடு அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த தகவலை அடுத்து, மாங்காடு போலீஸாா் மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வந்தனா்.

இந்த நிலையில், மாங்காடு அண்ணா நகா் பகுதியில் உள்ள சுடுகாடு பகுதியில் சிலா் கஞ்சா உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அங்கு போலீஸாா் சோதனை நடத்திய போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த போரூா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ரெளடியும், சரித்தர பதிவேடு குற்றவாளியுமான அப்பாஸ் (25), மாங்காடு பகுதியைச் சோ்ந்த இளங்கோவன் (38) ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 1.50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.