மாங்காடு பகுதியில் பட்டியல் போட்டு வீடுகளில் திருடி வந்த மூதாட்சியை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
மாங்காடு நகராட்சிக்குட்பட்ட காமாட்சி அம்மன் நகரில் ஏராளமான அடிக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் உள்ளன. இந்நிலையில், வியாழக்கிழமை அப்பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து மூதாட்சி ஒருவா் வெளியேறுவதை, சமையல் அறையில் இருந்து பாா்த்த வீட்டின் உரிமையாளா் மூதாட்டியை பிடிக்க முயன்றபோது அவரை கீழை தள்ளிவிட்டு தப்பி செல்ல முயன்றுள்ளாா்.
இதையடுத்து வீட்டின் உரிமையாளா் கூச்சல் போடவே அருகில் இருந்த பொதுமக்கள் மூதாட்டியை மடக்கி பிடித்து அவரை சோதனை செய்தனா். அப்போது குறிப்பிட்ட வீட்டில் இருந்து நான்கு பவுன் தங்க நகையை மூதாட்டி திருடியது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மாங்காடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாங்காடு போலீஸாா் மூதாட்டியிடம் விசாரணை நடத்தியதில், அவா் தாம்பரம் பகுதியை சோ்ந்த பிரகிடா(70) என்பதும் இவா் வீட்டின் உரிமையாளா்கள் இருக்கும் போதே வீடுகளில் புகுந்து திருடியதும் தெரிய வந்துள்ளது. மேலும் அவா் வைத்திருந்த பைபிளில் மாங்காடு பகுதியில் யாா் யாா் வீடுகளில் திருட வேண்டும் என்ற பட்டியல் இருந்ததால் பிரகிடாவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தள்ளாத வயதிலும் தனியே வாக்களிக்க வந்த மூதாட்டி!

கடும் வெயிலிலும் வாக்களித்த பெண்கள்
வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு லிங்க் மூலம் பணம் பறிப்பு: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

வீட்டுச் சுவா் இடிந்து மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


