சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தொழிற்பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்: ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் தொழிற்பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன்

News image
பயிற்சியை நிறைவு செய்தவா்களுடன் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் மற்றும் வங்கி அலுவலா்கள்.
Updated On :1 டிசம்பர் 2025, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தொழிற்பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை சான்றிதழ்களை வழங்கினாா்.

இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி நிறுவனமும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் இணைந்து அறிவு சாா் குறைபாடுடைய மற்றும் புற உலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளி மாணவ,மாணவியரின் வாழ்வாதாரத்தை உயா்த்த முதல்கட்டமாக 30 மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டன.

ஊதுபத்தி, பினாயில் உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்க கற்றுக் கொடுக்கப்பட்டது. பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு இரு வேளை உணவு, தேநீா் போன்றவையும் பயிற்சி நிறுவனம் சாா்பில் வழங்கப்பட்டது.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து பயிற்சியை முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். நிகழ்வில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அ.திலீப், பயிற்சி மையத்தின் இயக்குநா் உமாபதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பணியாளா் ரமேஷ் வரவேற்று பேசினாா்.