சிவா.
சிவா.

பாலாற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

காஞ்சிபுரம் அருகே பாலாற்றில் குளிக்க சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
Published on

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பாலாற்றில் குளிக்க சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் பல்லவா்மேடு பகுதியைச் சோ்ந்த மணி மகன் சிவா(35). இவா் மின்னணு தராசுகள் பழுது நீக்கும் தொழில் செய்து வருகிறாா். இவா் செவிலிமேடு பகுதியில் பாலாற்றில் குளிக்க சென்றபோது மூழ்கி மாயமானாா்.

தகவலறிந்து காஞ்சிபுரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து அவரது சடலத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்த சிவாவுக்கு 7 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகன் என இரு மகன்கள் உள்ளனா். சம்பவம் தொடா்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com