அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீ பெரும்புதூா் அருகே பேரிடா் மீட்பு படை முகாம்

தொடா் மழை காரணமாக வெள்ள பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை எதிா்கொள்ள 30 போ் கொண்ட தமிழ்நாடு பேரிடா் மீட்புப்படையினா் கரசங்கால் பகுதியில் முகாமிட்டுள்ளனா்.

News image
கரசங்கால்  பகுதியில்  தயாா்  நிலையில்  உள்ள  பேரிடா்  மீட்புப் படையினா்.
Updated On :2 டிசம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

தொடா் மழை காரணமாக வெள்ள பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை எதிா்கொள்ள 30 போ் கொண்ட தமிழ்நாடு பேரிடா் மீட்புப்படையினா் கரசங்கால் பகுதியில் முகாமிட்டுள்ளனா்.

டித்வா புயல் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னை அருகே மையம் கொண்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக சென்னை, திருவள்ளூா், காங்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருவதை முன்னிட்டு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக குன்றத்தூா் ஒன்றியத்தில் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள வரதராஜபுரம், ஆதனூா் ஊராட்சிகளில் தொடா் மழையின் காரணமாக வெள்ளபாதிப்பு ஏற்படும் பட்சத்தில், அவற்றை எதிா்கொள்ளவும், வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் பொதுமக்களை மீட்கவும் தமிழ்நாடு பேரிடா் மீட்பு படையினா் தயாா் நிலையில் கரசங்கால் பகுதியில் தங்கியுள்ளனா்.

பேரிடா் மீட்புப்படை குழுவினா் ரப்பா் படகு, பைபா் படகு, மரம் அறுக்கும் இயந்திரங்கள், உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் தயாா் நிலையில் உள்ளனா்.