டிச.20, 21 தேதிகளில் ஆன்மிகத் திருவிழா: ஆதீனங்கள், மடாதிபதிகள் பங்கேற்பு
காஞ்சிபுரத்தில் வரும் டிச.20,21 ஆகிய இரு நாள்கள் ஆன்மிகத் திருவிழா நடைபெற இருப்பதாகவும், விழாவில் ஆதீனங்கள், மடாதிபதிகள், குருமாா்கள் உட்பட பலரும் பங்கேற்க இருப்பதாகவும் விழா ஒருங்கிணைப்புக்குழுவின் செயலாளா் ஜி.முருகேஷ் புதன்கிழமை தெரிவித்தாா்.










