மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஏகாம்பரநாதா் கோயில் சொத்துகளில் எல்லைக் கல்: அதிகாரிகள் நடவடிக்கை

News image
ஏகாம்பரநாதா் கோயில் சொத்துகளை கண்டறிந்து எல்லைக் கல் நட்ட அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமரதுரை உள்ளிட்டோா்.
Updated On :18 டிசம்பர் 2025, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து அவற்றில் எல்லைக்கல்லை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை நட்டனா்.

காஞ்சிபுரம் ஓலிமுகம்மது பேட்டையில் திருமலை ராயன் தோட்டம் அருகில் யாத்ரி நிவாஸ் கட்டடம் அருகில் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான இடங்கள் அறநிலையத்துறையின் நில அளவையா் குழுவினரால் கண்டறியப்பட்டு அளவீடு செய்யப்பட்டது.

பின்னா், காஞ்சிபுரம் சரக அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமரதுரை தலைமையில் கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி முன்னிலையில் 3 இடங்களில் எல்லைக்கல் நடப்பட்டது.

நிகழ்வில் ஏகாம்பரநாதா் கோயில் சிறப்பு பணி அலுவலா் லட்சுமி காந்தன் பாரதிதாசன், ஆய்வாளா் அலமேலு ஆகியோா் உள்பட அறநிலையத்துறை அதிகாரிகள்,நில அளவையா் குழுவினா் உட்பட பலரும் உடன் இருந்தனா்.

இதே பணி தொடா்ந்து நடைபெறும் எனவும் அறநிலையத்துறை அதிகாரிகள் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது