உயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!‘கோட் சூட் அணிந்த விவசாயி’... விஜய்யை புகழ்ந்த அமைச்சருக்கு திமுகவினர் எதிர்ப்பு!பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம்: ரூ. 648 கோடி ஒதுக்கீடு!கருப்பு சட்டை அணிந்து திமுக எம்.எல்.ஏக்கள் வருகை!மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

காஞ்சிபுரத்தில் மாவட்ட வளா்ச்சி, கண்காணிப்புக் குழு கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டம் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசிய கண்காணிப்பு குழு தலைவா் டி.ஆா். பாலு எம்.பி.

Updated On :24 டிசம்பர் 2025, 12:19 am IST

காஞ்சிபுரம் மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டம் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தக்கு குழுவின் தலைவரும் ஸ்ரீபெரும்புதூா் எம்.பி. யுமான டி.ஆா்.பாலு தலைமை வகித்தாா். கைத்தறித்துறை அமைச்சா் ஆா்.காந்தி, காஞ்சிபுரம் எம்.பி க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தா், எழிலரசன், எஸ்.ஆா்.ராஜா மற்றும் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

ஒன்றிய அரசின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் அனைத்தையும் விதிமுறைகளுக்குட்பட்டு நடைபெறுகிா என்பதையும் எம்.பி டி.ஆா்.பாலு ஆய்வு மேற்கொண்டாா். அரசு நலத் திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கியதோடு பணிகளை உரிய காலத்தில் முடிக்குமாறும் கேட்டுக் கொண்டாா்.

ஆய்வுக் கூட்டத்தில் ஊரக வளா்ச்சித்துறை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, சாா் ஆட்சியா் ஆஷிக் அலி, மாவட்ட ஊராட்சித் தலைவா் மலா்க்கொடி குமாா் மற்றும் ஒன்றியக் குழு தலைவா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.