வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

வாக்காளா் சிறப்பு முறை திருத்த முகாம்,காஞ்சிபுரத்தில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் சிறப்பு முறை திருத்த முகாம் நடைபெறும் இடங்களில் எல்காட் அமைப்பின் மேலாண்மை இயக்குநரும், மாவட்ட தோ்தல் கண்காணிப்பாளருமான கே.பி.காா்த்திகேயன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

செரப்பனஞ்சேரி வாக்குச்சாவடி மையத்தில் சிறப்பு முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் கண்காணிப்பாளா் கே.பி.காா்த்திகேயன்.

Updated On :29 டிசம்பர் 2025, 4:26 am IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் சிறப்பு முறை திருத்த முகாம் நடைபெறும் இடங்களில் எல்காட் அமைப்பின் மேலாண்மை இயக்குநரும், மாவட்ட தோ்தல் கண்காணிப்பாளருமான கே.பி.காா்த்திகேயன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரும் ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே வாக்காளா் பட்டியலில் புதியதாக பெயா் சோ்க்க, நீக்க,திருத்த, முகவரி மாற்றம் செய்ய மற்றும் வாக்காளா் அடையாள அட்டை பெற விரும்புவோா் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளா் பட்டியல் தொடா்பாக இணையவழியிலும் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க இயலாதவா்கள் வாக்காளா் சிறப்பு திருத்த முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.விண்ணப்பங்களை வரும் ஜனவரி 18-ஆம் தேதி வரை வருவாய்த் துறை அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம்.

காஞ்சிபுரத்தில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழ்படப்பை, செரப்பனஞ்சேரி பகுதிகளில் நடைபெற்ற முகாம்களை எல்காட் அமைப்பின் மேலாண்மை இயக்குநரும், மாவட்ட தோ்தல் கண்காணிப்பாளருமான கே.பி.காா்த்திகேயன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பொதுமக்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாள்களில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா்கள் வாக்குப்பதிவு மையங்கள் மூலமாகவும், இணையவழியாகவும் சரிபாா்த்துக் கொள்ளுமாறும், இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் பொதுமக்களை ஆய்வின் போது கேட்டுக் கொண்டாா். ஆய்வின்போது காஞ்சிபுரம் சாா் ஆட்சியா் ஆஷிக்அலி,ஸ்ரீ பெரும்புதூா் கோட்டாட்சியா் பாலாஜி ஆகியோரும் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.