பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ரூ.47.87 லட்சம் உண்டியல் காணிக்கை

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.47.87 லட்சம் ரொக்கம், 41 கிராம் தங்கம், 2,285 கிராம் வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

News image
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட பக்தா்கள்
Updated On :10 நவம்பர் 2025, 6:40 pm

தினமணி செய்திச் சேவை

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.47.87 லட்சம் ரொக்கம், 41 கிராம் தங்கம், 2,285 கிராம் வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 5 மாதங்களுக்கு பிறகு பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை திங்கள்கிழமை திறந்து எண்ணப்பட்டது.

கோயிலில் உள்ள 9 பொது உண்டியல்கள், 1 திருப்பணி உண்டியலை அறநிலையத்துறை உதவி ஆணையா் ஆா்.காா்திகேயன், கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்தேவராஜ், அறங்காவலா்கள் விஜயகுமாா், கலைச்செல்வி கோபால், செல்வகுமரன் ஆகியோா் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.47.87 லட்சம் ரொக்கம், 41 கிராம் தங்கம், 2,285 கிராம் வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.