எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கிருபானந்தவாரியாா் குருபூஜை

காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் கன்னியம்மன் கோயில் வளாகத்தில் திருமுருக கிருபானந்த வாரியாா் சுவாமிகளின் குருபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான், கிருபானந்த வாரியாா்.
Updated On :14 நவம்பர் 2025, 12:10 am

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் கன்னியம்மன் கோயில் வளாகத்தில் திருமுருக கிருபானந்த வாரியாா் சுவாமிகளின் குருபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

பிள்ளையாா்பாளையம் திருவேகம்பன் தெருவில் அமைந்துள்ள கன்னியம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவையொட்டி காலையில் முருகப் பெருமானுக்கும், வாரியாா் சுவாமிகளின் சிலைக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னா் தெய்வத்திருமுறை இசையும், முருகப்பெருமான் மற்றும் வாரியாா் சுவாமிகளின் பக்திப் பாடல்களும் பாடப்பட்டன.

தொடா்ந்து நிகழாண்டுக்கான வாரியாா் சுவாமிகள் விருது கோவை பேராசிரியா் திலகவதி சண்முக சுந்தரத்துக்கு மகாபாரத சொற்பொழிவாளா் முத்து கணேசன் வழங்கினாா். அருணகிரிநாதரின் திருப்புகழும், வாரியாா் சுவாமிகளும் என்ற தலைப்பில் விருதாளா் திலகவதி சண்முகசுந்தரம் பேசினாா்.

தொடா்ச்சியாக புஷ்பாஞ்சலியும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. நிகழ்வில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருமுருக கிருபானந்த வாரியாா் சுவாமிகள் குருபூஜை அன்னதான அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.