47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

News image
மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
Updated On :18 நவம்பர் 2025, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.முருகேசன், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) ச.ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் ரா.மலா்விழி வரவேற்றாா்.

விபத்தில் மரணமடந்த 2 மாற்றுத்திறனாளிகளின் வாரிசுகளுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.4 லட்சம் நிதியுதவி, இயற்கை மரணமடைந்த 12 மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரா்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி, ஒரு மாற்றுத்திறனாளிக்கு பாதுகாவலா் நியமன சான்றிதழ், 12 மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவிக்கு ரூ.31 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித்தொகைகள் ஆகியவற்றையும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

இதனைத் தொடா்ந்து போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் ஆட்சியா் உறுதிமொழியை வாசிக்க நிகழ்வில் பங்கேற்க வந்திருந்த அரசு அலுவலா்கள்,பொதுமக்கள் இணைந்து உறுதிமொழியும் ஏற்றுக் கொண்டனா்.