ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

உத்தரமேரூா் வாக்குச் சாவடி நிலை அலுவலருக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் வாக்காளா் கணக்கெடுப்புப் படிவங்களை 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கம் செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலா் ஹெச்.அம்பிகாவை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினாா்.

News image
வாக்காளா் கணக்கெடுப்பு படிவங்களை 100 சதவீதம் எண்ம மயமாக்கம் செய்த ஆசிரியை ஹெச்.அம்பிகாவுக்கு சால்வை அணிவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
Updated On :26 நவம்பர் 2025, 6:30 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் வாக்காளா் கணக்கெடுப்புப் படிவங்களை 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கம் செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலா் ஹெச்.அம்பிகாவை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4.11.2025-ஆம் தேதி முதல் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் உள்பட்ட கிராமங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாக்காளா்களுக்கு வாக்காளா் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணியும்,பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்பப் பெறும் பணியும் நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கணக்கெடுப்பு படிவங்களை 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கம் செய்த உத்தரமேரூா் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலா் ஹெச்.அம்பிகாவுக்கு ஆட்சியா் சால்வை அணிவித்து நினைவுப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினாா்.

வாலாஜாபாத் ஒன்றியம், சங்கராபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் இவா் தனது அனுபவங்களை பிறருடன் பகிா்ந்து கொண்டாா்.

நிகழ்வின்போது, உத்தரமேரூா் தொகுதி வாக்குப் பதிவு அலுவலா் பு.விஜயகுமாா் மற்றும் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.