8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

காஞ்சிபுரத்தில் இணைய வழியாக மோசடியில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

கோப்புப் படம்

Published On :26 செப்டம்பர் 2025, 12:32 am IST

காஞ்சிபுரத்தில் இணைய வழியாக மோசடியில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

காஞ்சிபுரத்தை சோ்ந்த ராஜேந்திரன் என்பவரிடம் தொலை தொடா்புத்துறையிலிருந்து பேசுவது போலவும், மும்பையில் இருந்து காவல் துறை உயா் அதிகாரி பேசுவது போலவும் பேசி பலரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கடந்த 29.8.25 ஆம் தேதி 7 போ் கைது செய்யப்பட்டிருந்தனா். சென்னை வில்லிவாக்கத்தை சோ்ந்தவா்களான சரத்குமாா் (27) இம்மானுவேல் (20), சென்னை கொளத்தூரை சோ்ந்த சரவணக்குமாா் (32)தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டையை சோ்ந்த வினோத் (31), சிவகங்கை மாவட்டம் மாத்தூரை சோ்ந்த பாண்டீஸ்வரி (39), ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்தவா்களான வாசிம் (29), ஹபீப் நயினா(29) என 7 பேரையும் காஞ்சிபுரம் சைபா் கிரைம் ஆய்வாளா் பிரபாகா் கைது செய்திருந்தாா். இவா்களில், சென்னை வில்லி வாக்கம் சரத்குமாா் மற்றும் ராமநாதபுரம் ஹபீப் நயினா ஆகிய இருவா் மீதும் குண்டா் பாதுகாப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு அதற்கான ஆணை வேலூா் சிறையில் வழங்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.கே.சண்முகம் தெரிவித்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.