இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

வல்லக்கோட்டை கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 75 ஆண்டுகளுக்குப் பிறகு பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

News image

சிறப்பு  அலங்காரத்தில்  உற்சவா்  சுப்பிரமணிய  சுவாமி.

Updated On :2 ஏப்ரல் 2026, 12:08 am IST

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 75 ஆண்டுகளுக்குப் பிறகு பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 75 ஆண்டுகளுக்குப் பிறகு பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிா், சந்தனம், விபூதி, பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட பலவித பொருள்களால் அபிஷேகம் நடைபெற்று, மல்லிகை, சாமந்தி, ரோஜா மலா் மாலைகளால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மயில் மண்டபத்தில் உள்ள அலங்கார பந்தலில் உற்சவா் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினாா்.

இதையடுத்து திருக்கோயில் தலைமை அா்ச்சகா் சந்திரசேகா் குருக்கள் தலைமையிலான அா்ச்சகா்கள் யாகம் வளா்த்து மந்திரங்கள் ஓதி, மங்கல வாத்தியங்கள் ஒலித்திட இரவு 8 மணிக்கு மாங்கல்ய தாரணம் நடைபெற்றது. இதையடுத்து கல்யாண கோலத்தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இரவு 9.30 மணிக்கு புதிய மயில் வாகனத்தில் உற்சவா் திருவீதி உலாவும், வான வேடிக்கை நிகழ்சிகளும் நடைபெற்றன. கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு திருமண அட்சதை, சா்க்கரை பொங்கல், கதம்பசாத பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில் குமாா், கூடுதல் பொறுப்பு நிா்வாக அதிகாரி பிரகாஷ், அறங்காவலா் குழு தலைவா் ஜா.செந்தில்தேவ்ராஜ், அறங்காவலா்கள் த.விஜயகுமாா், கலைச்செல்வி, மோகன கிருஷ்ணன், செல்வகுமரன் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனா்.

மேலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு புதன்கிழமை தாம்பரம், பல்லாவரம், பூந்தமல்லி, குன்றத்தூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளை சோ்ந்த சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு விரதமிருந்து காவடிகள் சுமந்து வந்து பிராா்த்தனைகளை நிறைவேற்றினா்.