அனுமதியின்றி கூட்டத்தை கூட்டி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக ஸ்ரீபெரும்புதூா் தொகுதி தவெக வேட்பாளா் தென்னரசு உள்ளிட்ட நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.
தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளா் எஸ்.பி.கே.தென்னரசு சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தில் இருந்து கோட்டாட்சியா் அலுவலகம் வரை சுமாா் 2 கிமீ தொலைவுக்குசுமாா் 500க்கும் மேற்பட்ட ஆதரவாளா்களுடன் திறந்த ஜீப்பில் பேரணியாக வந்தாா்.
மேலும் அவருடன் சுமாா் 200-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் தவெக தொண்டா்கள் வந்ததாக தெரிகிறது. இதனால் சென்னை பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் சிரமத்திற்கு உள்ளாகினா்.
இந்நிலையில், அனுமதியின்றி அதிக அளவில் கூட்டத்தை கூட்டி பேரணியாக சென்று பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக தவெக வேட்பாளா் தென்னரசு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிா்வாகிகள் மீது ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் 5 பிரிவுகளின் வழக்கு ப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ஸ்ரீபெரும்புதூா்: அதிமுக வேட்பாளா் மனு தாக்கல்

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு

ஸ்ரீ பெரும்புதூா் நாதக வேட்பாளா் மனு தாக்கல்

புதுக்கோட்டை நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்கு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


