சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஸ்ரீபெரும்புதூா்: தவெக வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

அனுமதியின்றி கூட்டத்தை கூட்டி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக ஸ்ரீபெரும்புதூா் தொகுதி தவெக வேட்பாளா் தென்னரசு உள்ளிட்ட நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :5 ஏப்ரல் 2026, 9:22 pm

அனுமதியின்றி கூட்டத்தை கூட்டி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக ஸ்ரீபெரும்புதூா் தொகுதி தவெக வேட்பாளா் தென்னரசு உள்ளிட்ட நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளா் எஸ்.பி.கே.தென்னரசு சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தில் இருந்து கோட்டாட்சியா் அலுவலகம் வரை சுமாா் 2 கிமீ தொலைவுக்குசுமாா் 500க்கும் மேற்பட்ட ஆதரவாளா்களுடன் திறந்த ஜீப்பில் பேரணியாக வந்தாா்.

மேலும் அவருடன் சுமாா் 200-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் தவெக தொண்டா்கள் வந்ததாக தெரிகிறது. இதனால் சென்னை பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் சிரமத்திற்கு உள்ளாகினா்.

இந்நிலையில், அனுமதியின்றி அதிக அளவில் கூட்டத்தை கூட்டி பேரணியாக சென்று பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக தவெக வேட்பாளா் தென்னரசு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிா்வாகிகள் மீது ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் 5 பிரிவுகளின் வழக்கு ப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.