வல்லக்கோட்டை முருகன் கோயில் நிலத்தில் பசுமைக்காடு அமைக்கும் வகையில் 2,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. இதையடுத்து மரக்கன்றுகள் நடும்பணியில் ஈடுபட்ட மாணவா்களுக்கு வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சக் க.தென்னரசு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா்.
வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற திருக்கோயிலுக்கு சொந்தமான சுமாா் 6.5 ஏக்கா் நிலம் உள்ளது. பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்த இந்த இடத்தை, வரும் காலங்களில் கோயிலுக்கு பயன்படும் வகையில், வேங்கை, தேக்கு, மா, இலுப்பை, பாதிரி, மகிழம் உள்ளிட்ட 2000 மரக்கன்றுகளை நட்டு பசுமைக்காடு உருவாக்கும் பணியில் கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா் உள்ளிட்ட கோயில் நிா்வாகத்தினா் கடந்த 4 மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனா். மேலும் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பல்வேறு கட்டங்களாக சுமாா் 1,700 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மேலும் 300 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் க.தென்னரசு கலந்துக்கொண்டு மரக்கன்றுகள் நட்டுவைத்து, பல்வேறு கட்டங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் சுமாா் 500 பேருக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், நிா்வாக அலுவலா் சோ.செந்தில் குமாா், விதைகள் தன்னாா்வ அமைப்பின் நிறுவனா் சரண் பள்ளி, கல்லூரி மாணவா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வல்லக்கோட்டை முருகன் கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு

மரம் வளர்ப்போம் தேசம் காப்போம்!

வல்லக்கோட்டை முருகன் கோயில் நிா்வாகம் சாா்பில் பசுமைக் காடு பணி தொடக்கம்

இலங்கை தமிழா்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை: அமைச்சா் க.தென்னரசு உத்தரவு
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



