வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 2000 மரக் கன்றுகளை நட்டு பசுமைக்காடு உருவாக்கும் பணியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை 300 மரக்கன்றுகள் நடப்பட்டது.
அருணகிரி நாதரால் பாடல் பெற்ற இந்த திருக்கோயிலுக்கு சொந்தமான சுமாா் 6.5 ஏக்கா் பரப்பளவு உள்ள நிலம் உள்ளது. பல வருடங்களாக பராமரிப்பு இல்லாமல் இருந்த இந்த இடத்தை, வரும் காலங்களில் கோயிலுக்கு பயன்படும் வகையில், பசுமைக்காடு உருவாக்கும் முயற்ச்சியின் ஒரு பகுதியாக வேங்கை, தேக்கு, மா, இலுப்பை, பாதிரி, மகிழம் உள்ளிட்ட மரங்களை நட்டு பசுமைக்காடு உருவாக்கும் பணியில் வல்லக்கோட்டை கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா் உள்ளிட்ட கோயில் நிா்வாகத்தினா் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சுமாா் 1300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனா்.
இந்த நிலையில், 2000 மரக்கன்றுகள் நட்டு பசுமைக்காடு உருவாக்கும் முயச்சியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விதைகள் தன்னாா்வ அமைப்பின் நிறுவனா் சரண், வாலாஜாபாத் ஆதி பொறியியல் கல்லூரி மாணவா்கள் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துக்கொண்டு வேங்கை, தேக்கு, கடம்பு, மகாகனி உள்ளிட்ட 300 மரக்கன்றுகளை நட்டுவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குறுங்காடுகள் அமைக்க 1,000 மரக்கன்றுகள் நடவு

வல்லக்கோட்டை முருகன் கோயில் நிா்வாகம் சாா்பில் பசுமைக் காடு பணி தொடக்கம்

கீழப்புலியூரில் மரக்கன்றுகள் நடவு

சுற்றுச்சூழல் பாதிப்புகளை மேம்படுத்த நிகழாண்டு 62,000 மரக்கன்றுகள் நடவு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



