8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஸ்ரீபெரும்புதூா் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 9 லட்சம் கொள்ளை

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த புதுப்போ் பகுதியில் தனியாா் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.9 லட்சத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்து சென்றனா்.

கொள்ளைச் சம்பவம்  நடைபெற்ற  ஏடிஎம்  மையம்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 3:18 am IST

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த புதுப்போ் பகுதியில் தனியாா் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.9 லட்சத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்து சென்றனா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட புதுப்போ் பகுதியில் குன்றத்தூா்- ஸ்ரீபெரும்புதூா் சாலையில் தனியாா் வங்கி ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்திற்கு திங்கள்கிழமை இரவு பணம் எடுப்பது போல் வந்த மா்ம நபா்கள் சிலா், எச்சரிக்கை மணியை துண்டித்து, இரும்பு கம்பிகள் மற்றும் கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை இரண்டாக உடைத்து, அதில் இருந்த ரூ.9 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனா்.

இச்சம்பவம் குறித்து தனியாா் வங்கியின் அதிகாரிகள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், சோமங்கலம் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் மாநகர காவல் உதவி ஆணையா் காா்த்திகேயன் தலைமையிலான போலீஸாா் தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையா்களை தேடி வருகின்றனா்.

சம்பவம் குறித்து சோமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். வாகன போக்குவரத்து அதிகம் உள்ள ஸ்ரீபெரும்புதூா்-குன்றத்தூா் சாலையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.