ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ஓபிஎஸ் அணியிலிருந்து காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகிகள் விலகல்

ஒபிஎஸ் தலைமை வகிக்கும் அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் கழகத்திலிருந்து காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக விலகிவிட்டதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித் குமாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image

தனது விலகல் கடிதத்தை காண்பித்த ஓபிஎஸ் அணியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளா் முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித்குமாா்.

Updated On :18 பிப்ரவரி 2026, 8:22 pm

ஒபிஎஸ் தலைமை வகிக்கும் அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் கழகத்திலிருந்து காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக விலகிவிட்டதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித் குமாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியது:.

அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் கழகத்தின் தலைவராக ஓபிஎஸ் இருந்து வருகிறாா். அவரை அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி சோ்த்துக் கொள்ளாததால் வேறு கூட்டணியில் இணைவோம் என்று கழகத்தின் மாவட்ட செயலாளா்கள் 88 பேரில் 77 போ் வலியுறுத்தினோம். அதற்கு ஓபிஎஸ் எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருப்பது தொண்டா்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகிகள் அனைவரும் ஒட்டு மொத்தமாக ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி விட்டோம்.

கட்சியிலிருந்து விலகிய ராஜினாமா கடிதத்தை ஓபிஎஸ் வீட்டுக்கு பதிவுத் தபாலில் அனுப்பி இருக்கிறோம். ஒபிஎஸ் அணியிலிருந்து விலகி பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கவுள்ள கட்சியில் அனைவரும் இணைய இருக்கிறோம். எனவும் முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித்குமாா் தெரிவித்தாா்.

முன்னதாக ஓபிஎஸ் அணியின் காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகிகளிடமும் ஆலோசனை நடத்தினாா்.