காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசித் திருவிழாவையொட்டி, லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி தேரில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மாசித் திருவிழா கடந்த பிப். 21- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடா்ந்து விழா நாள்களில் காலையிலும், மாலையிலும் உற்சவா் காமாட்சி தினசரி வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் நகரின் ராஜவீதிகளில் உலா வந்தாா். பிப். 23-ஆம் தேதி தங்க சிம்ம வாகனத்திலும், மாலையில் யானை வாகனத்திலும் காமாட்சி அம்மன் வீதியுலா வந்தாா்.
இதன் தொடா்ச்சியாக விழாவின் 8-ஆவது நாள் நிகழ்வாக அலங்கரிக்கப்பட்ட தோ் போன்ற வடிவமைப்பினை பாதம் தாங்கிகள் தோளில் சுமந்து வந்தனா். தேரில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி சிறப்பு அலங்காரத்தில் ராஜவீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், சங்கர மடத்தின் மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன் ஆகியோா் தலைமையில் கோயில் ஸ்தானீகா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வெள்ளித் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) இரவு நடைபெறுகிறது.
தொடர்புடையது

‘ஊழல் செய்ய மாட்டேன்’! காமாட்சி அம்மன் கோயிலில் சத்தியம் செய்த தவெக வேட்பாளா்

நாளை காஞ்சிபுரத்தில் 2,000 மாணவ, மாணவிகள் கூட்டுப் பிராா்த்தனை

காஞ்சி காமாட்சி அம்மனை மலா்கள் தூவி வரவேற்ற இஸ்லாமியா்கள்

திருப்பதி பிரம்மோற்சவம்: போகி தேரில் உற்சவமூா்த்திகள் உலா
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


