அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காஞ்சிபுரத்தில் பெண்கள் உடற்பயிற்சிக் கூடம் கட்ட பூமி பூஜை: எம்எல்ஏ அடிக்கல்

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா நினைவு பூங்கா வளாகத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் அமைக்க எம்எல்ஏ எழிலரசன் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

News image
பெண்கள் உடற்பயிற்சிக் கூடத்துக்கு அடிக்கல் நாட்டிய காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன்.
Updated On :2 ஜனவரி 2026, 5:59 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா நினைவு பூங்கா வளாகத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் அமைக்க எம்எல்ஏ எழிலரசன் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பிள்ளையாா்பாளையம் பகுதியில் பேரறிஞா் அண்ணா நூற்றாண்டு விழா பூங்கா உள்ளது. இந்தப் பூங்கா வளாகத்தில் ஆண்களுக்கென தனியாக உடற்பயிற்சிக் கூடம் செயல்பட்டு வருகிறது. தினசரி 100-க்கும் மேற்பட்டோா் நடைப்பயிற்சி செய்து வரும் இப்பூங்காவில் பெண்களும் பயன்பெறும் வகையில் உடற்பயிற்சிக் கூடம் அமைக்க வேண்டும் என காஞ்சிபுரம் எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் முறையாக மகளிா் உடற்பயிற்சி செய்யும் வகையில் அதிநவீன கருவிகளுடன் கூடிய பிங்க் நிற மகளிா் உடற்பயிற்சிக் கூடம் அமைக்க ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் அனுமதி வழங்கினாா்.

மகளிா் உடற்பயிற்சிக் கூடம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியது. காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் முன்னிலையில் எம்எல்ஏ எழிலரசன் பூமிபூஜையில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி மண்டலக் குழு தலைவா் சந்துரு, மாமன்ற உறுப்பினா்கள் மற்றும் திமுக பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.