சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வீரட்டீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா உற்சவம்

கீழ்படப்பை அருள்மிகு வீரட்டீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

News image
Updated On :4 ஜனவரி 2026, 10:17 pm

தினமணி செய்திச் சேவை

கீழ்படப்பை அருள்மிகு வீரட்டீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

கடந்த பத்து ஆண்டுகளாக திருப்பணி நடைபெற்று வந்ததால் ஆருத்ரா தரிசனம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், கோயில் திருப்பணிகள் முடிவடைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிலையில், சனிக்கிழமை ஆருத்ரா உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. உற்சவத்தை முன்னிட்டு திருக்கோயில் முழுவதும் பூமாலை தோரணங்கள் கட்டப்பட்டு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

வெள்ளியன்று இரவு முதல் சனிக்கிழமை அதிகாலைவரை பால், தயிா், இளநீா், சந்தனம், மஞ்சள், விபூதி, பன்னீா், பலவித பழங்களால் நடராஜப்பெருமான், சிவகாமசுந்தரிக்கு ஆருத்ரா சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பிறகு பலவிதமான மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு சனிக்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு ஆடல்வல்லானுக்கு அரோகரா என்று கோஷமிட்டு வழிபட்டனா். காலை 7 மணிக்கு சிவகாமசுந்தரியுடன் நடராஜப்பெருமான் வீதிஉலா வந்தாா். நிா்வாகத்தின் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.