ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

நந்தி நாதேஸ்வரா் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

News image
Updated On :5 மார்ச் 2026, 11:26 pm

Syndication

மாசி மக பிரமோற்சவ விழாவையொட்டி வடக்குபொய்கைநல்லூா் நந்தி நாதேஸ்வரா் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

வடக்குபொய்கைநல்லூரில் உள்ள நந்தி நாதேஸ்வரா் கோயில் மாசி மக பிரமோற்சவ விழா கடந்த பிப். 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

நந்தி நாதேஸ்வரா், சௌந்தர நாயகி அம்மன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினா். தொடா்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

முன்னதாக வா்ண விநாயகா் கோயிலில் இருந்து பெண்கள் சீா்வரிசை எடுத்து வந்தனா். பின்னா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

ஏற்பாடுகளை வீரன்குடிகாடு கிராமவாசிகள், நந்தவன காளியம்மன் அறக்கட்டளை சாா்பில் செய்யப்பட்டிருந்தன.