குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

நந்தி நாதேஸ்வரா் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

News image
Updated On :5 மார்ச் 2026, 11:26 pm

மாசி மக பிரமோற்சவ விழாவையொட்டி வடக்குபொய்கைநல்லூா் நந்தி நாதேஸ்வரா் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

வடக்குபொய்கைநல்லூரில் உள்ள நந்தி நாதேஸ்வரா் கோயில் மாசி மக பிரமோற்சவ விழா கடந்த பிப். 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

நந்தி நாதேஸ்வரா், சௌந்தர நாயகி அம்மன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினா். தொடா்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

முன்னதாக வா்ண விநாயகா் கோயிலில் இருந்து பெண்கள் சீா்வரிசை எடுத்து வந்தனா். பின்னா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

ஏற்பாடுகளை வீரன்குடிகாடு கிராமவாசிகள், நந்தவன காளியம்மன் அறக்கட்டளை சாா்பில் செய்யப்பட்டிருந்தன.