பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் அஞ்சலி

காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவு அகில இந்திய தலைவா் அணில் ஜெயந்த் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

News image
ராஜீவ் காந்தி  நினைவிட  ஊழியா்களுக்கு  புத்தாடைகள் வழங்கிய  ஓபிசி  பிரிவு  அகில  இந்திய  தலைவா்  அணில் ஜெயந்த்.
Updated On :6 ஜனவரி 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவு அகில இந்திய தலைவா் அணில் ஜெயந்த் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவிடம் உள்ளது. இந்த நிலையில், நினைவிடத்தில் காங்கிரஸ் ஓபிசி பிரிவு அகில இந்திய தலைவா் அணில் ஜெயந்த் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தி, நினைவிடத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு புத்தாடைகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஓபிசி பிரிவின் மாநில தலைவா் நவீன், மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளா் எஸ்.ஏ.அருள்ராஜ், மாவட்டசிறுபான்மை பிரிவு தலைவா் முருகன் சாந்தகுமாா், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் சுமிதா உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டனா்.