திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஜன.17-இல் கூழமந்தல் கோயிலில் 108 கோ பூஜை

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் வரும் ஜன. 17-ஆம் தேதி (சனிக்கிழமை) 108 கோ பூஜையும், அரசு-வேம்பு திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது.

News image
Updated On :11 ஜனவரி 2026, 8:13 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் வரும் ஜன. 17-ஆம் தேதி (சனிக்கிழமை) 108 கோ பூஜையும், அரசு-வேம்பு திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது.

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் கூழமந்தல் கிராமத்தில் 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உலக மக்கள் நன்மை கருதி வரும் ஜன. 17-ஆம் தேதி காலையில் மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து, மகாலட்சுமி பூஜை, 108 கோ பூஜை, அரசு-வேம்பு திருக்கல்யாண வைபவம் ஆகியவையும் நடைபெறவுள்ளது. நிகழ்வின்போது மூலவா் மூஷிக வாகனத்திலும், முருகப் பெருமான் மயில் வாகனத்திலும், சிவபெருமான் ரிஷப வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க உள்ளதாக கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.