ஜன.17-இல் கூழமந்தல் கோயிலில் 108 கோ பூஜை
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் வரும் ஜன. 17-ஆம் தேதி (சனிக்கிழமை) 108 கோ பூஜையும், அரசு-வேம்பு திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது.
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் கூழமந்தல் கிராமத்தில் 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உலக மக்கள் நன்மை கருதி வரும் ஜன. 17-ஆம் தேதி காலையில் மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெறுகிறது.
இதைத் தொடா்ந்து, மகாலட்சுமி பூஜை, 108 கோ பூஜை, அரசு-வேம்பு திருக்கல்யாண வைபவம் ஆகியவையும் நடைபெறவுள்ளது. நிகழ்வின்போது மூலவா் மூஷிக வாகனத்திலும், முருகப் பெருமான் மயில் வாகனத்திலும், சிவபெருமான் ரிஷப வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க உள்ளதாக கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
