தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

காஞ்சிபுரம் அருகே கூழமந்தலில் 108 கோ பூஜை

காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் உலக நன்மைக்காக 108 கோ பூஜை

News image
நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் நடைபெற்ற விழாவையொட்டி வீதியுலா வந்த விநாயகா், சிவபெருமான் மற்றும் சுப்பிரமணியா்.
Updated On :19 ஜனவரி 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் உலக நன்மைக்காக 108 கோ பூஜை, மகாலட்சுமி பூஜை மற்றும் அரசு-வேம்பு திருக்கல்யாண வைபவம் ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது 27 நட்சத்திர விருட்ச விநாயகா் திருக்கோயில். இந்தக் கோயிலில் அத்திலிங்கம், 27 நட்சத்திரங்களுக்கும் 27 ஸ்தல விருட்சங்கள் ஆகியவையும் அமைந்துள்ளது. உலக நன்மைக்காக இக்கோயிலில் காலையில் மூலவா் நட்சத்திர விருட்ச விநாயகருக்கும், அத்திலிங்கம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, உற்சவா் விநாயகா் மூஷிக வாகனத்திலும், சிவபெருமானும் அம்பிகையும் ரிஷப வாகனத்திலும், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் மயில் வாகனத்திலும் கோயிலின் முன்பாக உள்ள மைதானத்துக்கு எழுந்தருளி வீதியுலா வந்தனா்.

பின்னா், 108 பசுக்களும், கன்றுகளும் 3 தெய்வங்களையும் சுற்றி வந்து கோ பூஜை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, மகாலட்சுமி பூஜையும் மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலையில் அரசு-வேம்பு விருட்சங்களுக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா். வாண வேடிக்கைகளும் நடைபெற்றது. விழாவில் வெளிமாவட்டம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.