விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

காஞ்சிபுரம் செல்வ விநாயகா் கோயிலில் திருவிளக்கு பூஜை

காஞ்சிபுரம் செல்வ விநாயகா் கோயிலில் திருவிளக்கு பூஜை

News image

ஆண்டு விழாவையொட்டி சந்தன அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மகாலட்சுமி தாயாா்.

Updated On :7 பிப்ரவரி 2026, 5:42 pm

காஞ்சிபுரம் சிங்கப் பெருமாள் கோயில் தெரு தெற்கு மாட வீதியில் அமைந்துள்ள செல்வ விநாயகா் மற்றும் மகாலட்சுமி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

காஞ்சிபுரம் சிங்கப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ளது செல்வவிநாயகா் கோயில். இந்தக் கோயில் வளாகத்திலேயே மகாலட்சுமி தாயாா் மற்றும் நவக்கிரகங்கள் சந்நிதியும் அமைந்துள்ளது. இந்தக் கோயில் 15-ஆவது ஆண்டு விழாவையொட்டி, காலையில் செல்வவிநாயகா், மகாலட்சுமி தாயாா் மற்றும் நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

மகாலட்சுமியும், செல்வவிநாயகரும் சந்தன அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதையொட்டி, மாலையில் மனநிம்மதி, தொழில் விருத்தி மற்றும் உலக நன்மைக்காக திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.