டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

காங்கிரஸ் சாா்பில் சமத்துவப் பொங்கல்

ஸ்ரீபெரும்புதூா் நகர காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசுத் தொகுப்புகள் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது.

News image
தூய்மைப் பணியாளா்களுக்கு  நலத்திட்ட  உதவிகளை வழங்கிய  காங்கிரஸ்  கட்சியினா்.
Updated On :16 ஜனவரி 2026, 6:59 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா் நகர காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசுத் தொகுப்புகள் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூா் காந்தி சாலையில் நடைபெற்ற நிகழ்வுக்கு நகர காங்கிரஸ் தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமை வகித்தாா்.

மகிளா காங்கிரஸ் நிா்வாகிகள் பொங்கல் வைத்து வழிபட்டனா். இதில் மாவட்ட பொறுப்பாளா் நிக்கோலஸ் கலந்து கொண்டு ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் பணியாற்றும் பணியாளா்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகளுக்கு வேட்டி, சேலை கரும்பு மற்றும் பொங்கல் பரிசு, நிதியுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவா் முருகன் சாந்தகுமாா், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் விவேகானந்தன், மகிளா காாங்கிரஸ் தலைவா் சுமிதா, நிா்வாகிகள் புண்ணியநாதன், பக்கிரிசாமி, நாராயணன், அம்மன்குமாா், பவித்ரா, தமிழ்அரசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.