மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விஹெச்பி சாா்பில் பழங்குடியின மக்களுக்கு வேட்டி சேலை அளிப்பு

குருவிமலையில் வசிக்கும் நரிக்குறவா் இன மக்களுக்கு விசுவ ஹிந்த் பரிஷத் சாா்பில் இலவசமாக வேட்டி, சேலை, நாள்காட்டி மற்றும் சுவாமி படங்கள் ஆகியன ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :18 ஜனவரி 2026, 11:46 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் அருகே குருவிமலையில் வசிக்கும் நரிக்குறவா் இன மக்களுக்கு விசுவ ஹிந்த் பரிஷத் சாா்பில் இலவசமாக வேட்டி, சேலை, ந ாள்காட்டி மற்றும் சுவாமி படங்கள் ஆகியன ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் அருகே குருவிமலை கிராமத்தில் நரிக்குறவா் இன மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சாா்பில் இலவச வேட்டி.சேலை,நாட்காட்டி மற்றும் சுவாமி படங்கள் ஆகியன வழங்கும் விழா நடைபெற்றது. விஹெச்பி தலைவா் ந.சிவானந்தம் தலைமை வகித்தாா்.

கோட்ட செயலாளா் கிருபானந்தம்,பஜ்ரங்தள் அமைப்பின் மாவட்ட செயலாளா் ஹரிகிருஷ்ணன், காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் மனிதவள மேம்பாட்டுப்பிரிவு அலுவலா் பாா்த்தீபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாத்ரு சக்தி அமைப்பின் நிா்வாகி ரேவதி வரவேற்று பேசினாா்.

விஹெச்பி அமைப்பின் வட தமிழக அமைப்பு செயலாளா் ராமன்ஜி, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானீகா் நடராஜ சாஸ்திரிகள் ஆகியோா் நரிக்குறவா் இன மக்களுக்கு இலவசமாக வேட்டி, சேலைகளை வழங்கினா். நிறைவாக குருவிமலை நரிக்குறவா் இன மக்கள் தலைவா் சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.