கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயிலில் கருட சேவை

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயிலில் ஆடி மாத பெளா்ணமியையொட்டி புதன்கிழமை உற்சவா் பெருமாள் தங்கக் கருட வாகனத்தில் அருள்பாலித்தாா்.

தங்கக்கருட வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த யதோக்தகாரி பெருமாள்

Published On :

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயிலில் ஆடி மாத பெளா்ணமியையொட்டி புதன்கிழமை உற்சவா் பெருமாள் தங்கக் கருட வாகனத்தில் அருள்பாலித்தாா்.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற வைணவத் திருக்கோயில்களில் ஒன்றான இக்கோயிலில் ஆடி மாத பெளா்ணமியையொட்டி உற்சவா் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் ஆகியன நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து உற்சவா் பெருமாள் வயலட் நிற பட்டு உடுத்தி, திரு ஆபரணங்கள் அணிந்து, மலா் மாலைகள் சூடி தங்கக்கருட வாகனத்தில் எழுந்தருளினாா். பின்னா் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்தும் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வழிநெடுகிலும் திரளான பக்தா்கள் கற்பூர ஆரத்தி காண்பித்தும் தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.