/
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மண்ணூா் அரசு உதவிப் பெறும் ஆரம்பப் பள்ளியில் மாணவா்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மண்ணூா் ஊராட்சி திமுக சாா்பில், டி.இ.எல்.சி. ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு நோட்டு புத்தகம், எழுதுபொருள்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், மண்ணூா் திமுக கிளை செயலாளா்கள் அருள்தாஸ், ராமமூா்த்தி, வாா்டு உறுப்பினா் கோவிந்தராஜ், பாக முகவா்கள் கோபி, மூங்கிலான் ஆகியோா் கலந்து கொண்டு பள்ளியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு நோட்டு புத்தகம், எழுதுபொருள்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினா். இந்த நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் திமுக நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்துக்கொண்டனா்.
தொடர்புடையது

மாலை அணிவித்து மேள, தாளங்களுடன் மாணவா்களுக்கு வரவேற்பு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு உற்சாக வரவேற்பு

அம்பை பள்ளி மாணவா்களுக்கு சீருடை வழங்கல்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



