வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சமையல் எரிவாயு கேபிள்களை ஆண்டுக்கு ஒரு முறை மாற்றுவது சிறப்பு: மாவட்ட தீயணைப்பு அலுவலா்

சமையல் எரிவாயு கேபிள்களை ஆண்டுக்கு ஒரு முறை மாற்றுவது சிறப்பு

News image

தீயணைப்பு உபகரணங்கள் குறித்து பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கமளித்த மாவட்ட தீயணைப்பு அலுவலா் அப்துல்பாரி, தீயணைப்பு நிலைய அலுவலா் பிரபாகரன்.

Updated On :7 ஜூன் 2026, 3:35 am IST

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு உருளையில் உபயோகிக்கக்கூடிய கேபிள்களை ஆண்டுக்கு ஒரு முறை மாற்றி விடுவது சிறப்பு என காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலா் அப்துல்பாரி சனிக்கிழமை பேசினாா்.

காஞ்சிபுரம் நகர தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், வாங்க கற்றுக்கொள்வோம் என்ற தலைப்பில் பொதுமக்களுக்கான விழிப்புணா்வு பயிற்சி பெரிய காஞ்சிபுரம் பஞ்சுப் பேட்டையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலா் அப்துல்பாரி கலந்து கொண்டு பயிற்சியின் போது பேசியது:

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு உருளையைப் பயன்படுத்தி முடிந்தவுடன் உடனடியாக அதை அனைத்து விட வேண்டும். பலரும் அதை அணைக்காமல் வெளியூா்களுக்கோ அல்லது வெளியிலோ சென்று விடுகின்றனா். அதே போல எரிவாயு உருளையில் பயன்படுத்தப்படும் கேபிள்களை ஆண்டுக்கு ஒரு முறை மாற்றுவது சிறப்பு. பலரும் பல ஆண்டுகளாக ஒரே கேபிள்களையே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனா். நமக்கு நண்பனாகவும், எதிரியாகவும் இருப்பது நெருப்பு ஒன்று தான்.

திடப் பொருள்களான கட்டைகள், பேப்பா் கட்டுகள் போன்றவற்றில் தீப்பற்றும் போது அதை எளிதாக அனைத்து விடலாம். இது ஒரு வகை நெருப்பு. இரண்டாவதாக பெட்ரோல், டீசல், ஆயில் இவற்றில் தீப்பற்றும்போது வீரியத்தை அதிகமாக ஏற்படுத்தும். இவை தீப்பற்றி எரியும்போது சிலா் தெரியாமல் அதில் தண்ணீரை ஊற்றி அனைத்தால் அதன் எரியும் வேகம் மேலும் அதிகமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

மூன்றாவதாக வாயுக் கசிவால் ஏற்படும் தீ விபத்தானது மிகவும் மோசமானது. சமையல் எரிவாயு உருளைகளை நேராக நிறுத்தித்தான் வைக்க வேண்டும். எங்கும் எடுத்துச் செல்லும்போது நேராக நிறுத்தியே கொண்டு செல்ல வேண்டும். அவற்றை சாய்த்து வைத்து எடுத்து செல்லக் கூடாது.

வீடுகளில் உள்ள மின்சாரம் மூலமாக தீப் பிடித்தால் உடனடியாகவும் மிகவும் ஜாக்கிரதையாகவும் பிரதான சுவிட்சை அணைத்து விட வேண்டும் என்றும் பேசினாா்.

பயிற்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு தீயணைப்பு உபகரணங்கள் குறித்து தீயணைப்பு நிலைய அலுவலா் பிரபாகரன், பயிற்சி தீயணைப்பு நிலைய அலுவலா் இந்திரா செயல்முறை விளக்கத்துடன் விரிவாக விளக்கிக் கூறினா்.