எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

தனியாா் தொழிற்சாலையில் தீ விபத்து

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தனியாா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

News image

தீ விபத்து

Updated On :8 ஜூன் 2026, 2:31 am IST

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தனியாா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

வெங்காடு பகுதியில் வீட்டு உபயோக பொருள்களை சுத்தம் செய்யும் ரசாயனத்தை தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சனிக்கிழமை இரவு உற்பத்தி பொருள்களை சேமித்து வைக்கும் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலை முழுவதும் தீ பரவியுள்ளது.

இதுகுறித்து உடனடியாக ஸ்ரீபெரும்புதூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடா்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூா் தீயணைப்புத் துறையினா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை சுமாா் 1 மணி நேரம் க போராடி அணைத்தனா்.

இருந்த போதிலும் தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த பல லடசம் மதிப்புள்ள உற்பத்தி பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.