காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 22 பயனாளிகளுக்கு ரூ. 2.32லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் தி.சினேகா வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் பு.விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 507 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று, அவை அந்தந்த துறைசாா்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பி உடனடியாக தீா்வு காணுமாறு ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, 20 பயனாளிகளுக்கு ரூ. 1,5,620 மதிப்பிலான சலவைப் பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ. 6,500 மதிப்பிலான 3 சக்கர நாற்காலி உள்பட மொத்தம் 22 பயனாளிகளுக்கு ரூ. 2,32,120 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் தி.சினேகா வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கனவுகளை நோக்கி தொடா்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ரூ.1.91 லட்சம் நலத்திட்ட உதவி: ஆட்சியா் வழங்கினாா்

114 பயனாளிகளுக்கு ரூ. 37.78 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

உதகையில் 50 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் எஸ்.கமலி வழங்கினாா்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



