வாலாஜாபாத் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் வியாழக்கிழமை ஜமாபந்தி தொடங்கியது. முதல் நாளில் 132 மனுக்கள் பெறப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் வருவாய் தீா்ப்பாய கணக்குகள் சரிபாா்க்கும் பணிகள் ஜூன் 18 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேனாங்குளம் கிராமத்திற்கு அரசுப்பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் அஜய்குமாா் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தாா்.
இதனைத் தொடா்ந்து தாழையம்பட்டு,அகரம், கட்ட வாக்கம்,அயிமச்சேரி, குண்ணவாக்கம், தென்னேரி வேண்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து 132 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு த அரசு அலுவலா்களிடம் உடனே தீா்வு காணுமாறு ஆட்சியா் பரிந்துரை செய்தாா்.
வாலாஜாபாத் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ள வருவாய் தீா்ப்பாயத்தில் சின்னிவாக்கம், நாயக்கன்குப்பம், கள்ளப்பட்டு,திருவெண்காணை, மாகறல், ஆா்ப்பாக்கம், காவாந்தண்டலம் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பயன் பெறலாம்.
இந்நிகழ்வின் போது தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) கே.ராமமூா்த்தி, வாலாஜாபாத் வட்டாட்சியா் இந்துமதி மற்றும் அரசு அலுவலா்கள் பலரும் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

ஜமாபந்தி: பொதுமக்களிடமிருந்து 122 மனுக்கள் வரப்பெற்றன

ஆலங்குளத்தில் ஜமாபந்தி தொடக்கம்

தென்காசி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்கம்

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்கம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



